Friday, December 31, 2010

உருத்திராட்ச மகிமை

உருத்திராடசமும் சாலிக்கிராமமும் நேபாளத்தில்தான் அதிகமாகக் கிடைக்கின்றன. உருத்திராட்சம் என்பதே சிவவடிவம். மனிதன் பிறப்பிலிருந்து பிரியும் வரை தன பந்தங்களிலிருந்தும் பாசங்களிலிருந்தும் விடுபட, எதோ ஒரு மதத்தைச் சார்ந்து வழிபடுகிறான். சிவநேசச் செல்வர்கள் உருத்திராட்சத்தின் மூலம் சிவனிடம் நேரிடையாக பக்தி செலுத்துவதுடன் சதா சிவனையே நினைந்து உருகுகிறார்கள். உருத்திராட்சத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது, எம்மதத்தினரும் எங்குள்ளவரும் உருத்திராட்சம் அணியலாம். நம்பிக்கையுடன் அணிபவர்கள் அற்புத பலன்களைப் பெறுகிறார்கள். உருத்திராட்சம் வாங்குவது வைரத்தைச் சோதித்து வாங்குவது போல தேர்ந்தெடுக்க வேண்டு, இமாலயப் பிரதேசத்தில் கிடைக்கும் உருத்திராட்சம் பல நன்மைகளைத் தருகிறது, உருத்திராட்சம் கெடுதல் செய்யாது. ஒரு உருத்திராட்சத்தை 40 நாட்கள் அணிந்தபின் உடலிலும் உள்ளத்திலும் ஒரு மாற்றம் தெரியவரும். உருத்த்ராட்சத்தை ஸ்படிக மணிகளுடன் அல்லது துளசி விதிகளுடன் அணியலாம். உருத்திராட்சம் சிவா சொரூபம். ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சர்த்தவாறே உருத்திராட்சத்தை அணியலாம். கழுத்திலோ அல்லது ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணியலாம். மயான பூமிக்கோ மது அருந்தும் பிரதேசங்களுக்கோ உருத்திராட்சம் அணிந்து செல்லக்கூடாது. கறுப்புக் கயிற்றில் அல்லது தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்களில் கட்டி அணியலாம். உருத்திராட்சம் அணிந்திருப்பதை பிறருக்குக் காண்பிக்கக் கூடாது. இரவு நேரங்களில் தூங்கும் பொது கழற்றி வைக்கவும். சருமத்தைத் தொடும் முறையில் அணிவது நல்லது. பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம்.

உருத்திராட்சம் 23 வகைகள் உள்ளன.

ஒரு முகம்: லெக்ஷ்மி சொரூபம். எல்லா எண்ணங்களும் பூர்த்தியாகும். இதை அணிவதோ இல்லத்தில் வைத்து பூசிப்பதோ லட்சுமி தேவியை ஆராதனை செய்வதற்குச் சமம். மேலும் மூளை, தலை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

இரண்டு முகம்: அர்த்த நாரீஸ்வரர் (சிவ பார்வதி சொரூபம்) - கணவன் மனைவிக்கும் ஒற்றுமை, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மூன்று முகம்: மாதா சரஸ்வதி சொரூபம். மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், தேர்வில் வெற்றிக்கு வழிகாட்டிடும்.

நான்கு முகம்: பிரம்மா சொரூபம். தியானத்திற்கு சிறந்தது.

ஐந்து முகம்: ருத்ர வடிவ, பஞ்சேஸ்வரர் ரூபம். காம, குரோத, லோப, அகங்காரம், அதீத பாசம், இவைகளை அகற்றும். இரத்தக் கொதிப்பு, இதய நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆறு முகம்: கார்த்திகேய ரூபம். பிள்ளைப்பேறு விரும்பும் பெண்கள் இதை கையில் அணிந்து ஓம் நமசிவாய நம; என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் நன்மை பெறுவார்கள்.

எழு முகம்: சப்தரிஷி ரூபம். வியாபார விருத்தி, பங்கு சந்தையில் லாபம் தேடுபவர்களுக்கும் மூச்சுத்திணறல், ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஒரு மருந்து.

எட்டு முகம்: கணேச ரூபம்.

ஒன்பது முகம்: நவதுர்கா ரூபம். இதனை அணிவதன் மூலம் உடலில் உள்ள உபாதைகளைத் தவிர்த்து உடலில் வலிமை தருவது. இடது கையில் சிரத்தையுடன் அணிய வேண்டும்.

பத்து முகம்: விஷ்ணு ரூபம். வாழ்க்கையில் முக்தியை அடைய விரும்புபவர்களுக்கு நல்லது.

பதினோரு முகம்: சிவரூபம், வாழ்க்கையில் வெற்றி வாகை சூட்டி மகிழ்ச்சியை அளிக்கிறது.

பணிரெண்டு முகம்: சூர்யா ரூபம். அரசியல்வாதிகளுக்கு நன்மை தருவது.

பதிமூன்று முகம்: விஸ்வதேவ ரூபம். (இந்திரன்) எல்லா நன்மைகளும் தர வல்லது.

பதினான்கு முகம்: பரமாத்மா சிவ ரூபம். சமூகத்தில் பெரிய அந்தஸ்து ஏற்பட உதவுகிறது.

பதினைந்து முகம்: பசுபதிநாத் ரூபம். தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அணிவது. பெண்களுக்கு பிரசவக் கோளாறுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பதினாறு முகம்: ஹரிசங்கர் ரூபம். நெருப்பு, திருட்டு இவைகளிலிருந்தும் இதய நோய்களிலிருந்தும் விடுபட உதவுகிறது.

பதினேழு முகம்: சீதாராம ரூபம். வீடு, வாகனங்கள் நிலம் வாங்கி சேர்த்திட வல்லது.

பதினெட்டு முகம்: பைரவ ரூபம். மரண பயத்திலிருந்து விடுபடவும் புகழுடனும் தெய்வீக வழிகளில் நாட்டமும் ஏற்பட அணியலாம்.

பத்தொன்பது முகம்: நாராயண ரூபம். சகல வியாதிகளிலிருந்தும் விடுபட அணிவது நல்லது.

இருபது முகம்: ஜனார்த்தனா ரூபம். பேய் பிசாசு பில்லி, சூன்யம் இவைகளிலிருந்து விடுபட சிறந்தது.

இருபத்தோரு முகம்: சிவரூபம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சிவன் அருள் பெற்று செல்வம் கொழித்து ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படுத்தி ஆரோக்கியத்தையும் சகல சம்பத்துகளையும் அணிள்ள வல்லது.

கௌரி சங்கர் - சிவபார்வதி ரூபம். உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு ஈசனையே துதித்து வாழும் வகையைத் தருவது.

நன்றி
"திருத்தலப் பயணச் செம்மல்" பேராசிரியர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு
உழவாரம் (சமய இலக்கியத்திங்கள் இதழ்)
மலர் - 26 - 2010 டிசம்பர் - இதழ் - 5
மதுரை பன்னிரு திருமுறை மன்றம்



























Thursday, December 30, 2010

காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்

ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்

நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு

நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு

வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்

விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !


ஆன்மீக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!

ஆன்மீக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!

Tuesday, December 28, 2010

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம் 27 . 12 . 2010 அன்று பூங்கா முருகன் கோயில் (காந்தி மண்டபம்) மதுரை மிகவிமர்சையாக ஐயாப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழு வருகிற 5 . 01 . 2011 அன்று இரவு 6 .௦௦ 00 மணிக்குமேல் இருமுடி கட்டி புறப்படுகிறது. இவர்களின் ஆன்மீகப் பயணம் இனிதாக அமைய ஐய்யன் ஐயப்பனை வேண்டிக்கொள்கிறோம்.

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம் 27 . 12 . 2010 அன்று பூங்கா முருகன் கோயில் (காந்தி மண்டபம்) மதுரை மிகவிமர்சையாக ஐயாப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழு வருகிற 5 . 01 . 2011 அன்று இரவு 6 .௦௦ 00 மணிக்குமேல் இருமுடி கட்டி புறப்படுகிறது. இவர்களின் ஆன்மீகப் பயணம் இனிதாக அமைய ஐய்யன் ஐயப்பனை வேண்டிக்கொள்கிறோம்.

Wednesday, December 8, 2010

வாழ்க்கை சிந்தனைகள்



ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாகத்தை தீர்க்காத தண்ணீர்
ததித்திரம் அறியாத பெண்கள்
கோபத்தை அடக்காத ஆண்கள்
குரு சொல் கேளாத சீடன்
குளிப்பதற்கு உதவாத தடாகம்
இவையாவும் இருந்தும் பயனில்லை ..........