Monday, January 31, 2011
நான் பார்த்த முருகன் திருஉருவம்
Sunday, January 30, 2011
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3
Saturday, January 29, 2011
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 5
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3
Friday, January 28, 2011
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 4
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
அரசாணிக்கால் நடுதல்
இக்குடும்பம் வாழையடி வாழையாக வளரவேண்டும் என்ற அடிப்படையில் அமைவது இது. மங்கலப் பெண்டிர் மூன்றுபேர் கூடிச் செய்யவேண்டு, மணமேடையின் இடப்புறம் (அதாவது பார்வையாளருக்கு நேரே வலதுபக்கம்) கட்ட வேண்டு, வாழை இலை பரப்பிப் பச்சரிசி இட்டு, "ஓம்" எனும் மந்திரம் எழுதி மணிவிழா நடத்திவைக்கும் பெரியவர் மலரிட்டு மணமகனைக்கொண்டு வலிபாடாற்றல்.
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்க்காண் அம்மானாய்
(திருவாசகம்)
மணமகள் சடங்கு
மணமகளுக்கு திருநீறு குங்குமமும் கொடுத்தல்
முத்திந்தாழ் வடமும் சந்தனக் குழம்பும்
நீரும் தன மார்பினில் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர் மரகத மடுத்தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற
ஆலவா யாவதும் இதுவே!
(சம்பந்தர் 3 : 120 : 7 )
பெற்றோர் வழிபாடு
மணமகள் தன தாய் தந்தையரை வணங்கி அவர்தம் திருவடிகளில் சந்தானம் பூசி மலரிட்டு வழிபாடு செய்தல்
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ!
அன்புடைய மாமனும் மாமியும் நீ!
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ!
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!
இப்பொன் நீ, இம்மானிநீ இம் முத்து நீ!
இறைவன் நீ, இரு ஊருந்த செல்வன் நீயே!
(அப்பர் 6 : 95 : 1 )
பெற்றோர் வாழ்த்துதல்
மணமகளைப் பெற்றோர் வாழ்த்தித்திருநீறும் குங்குமமும் அணிவித்துத் திருமணப் புத்தாடைகள் வழங்குதல்
காணார் புலித்தோல் உடை தலை ஊண் காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆறேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ!
(திருவாசகம்)
திருஊஞ்சல்
மணமேடைக்கு முன்னாள் எதிரெதிரே இரு நாற்காலிகளில் மணமகனையும் மணமகளையும் அமரச செய்தல் திருஊஞ்சல் பாட்டை மங்கல மகளிர் சிலர் பாடப், பின்பு நாதசுரம் சாதனை இசைத்தல்.
சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தால் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோச மங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணை பாடிப்
போராற்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ!
(திருவாசகம்)
Thursday, January 27, 2011
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 3
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
கோள் வழிபாடு (கும்ப வழிபாடு)
பச்சரிசியை வாழை இலைமேல் பரப்பிச் சிறிய செம்பு வைத்து அது நிறையத் தூய நீர் நிரப்பி, அதன் மேல் முழுத் தேங்காயும் உடன் மா இலைகளும் வைத்து, மலர் இட்டு, "நாளும் கோளும் (கிரகங்கள்) நல்லனவே செய்ய வேண்டும்". என்று இறைவனை நம் உள்ளத்தில் எண்ணி வேண்டுவோமாக!
வேயுறு தோழி பங்கன் விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு நிங்கள் கங்கை முடிமேல் அணிந்தது என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி
சனி, பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே!
(சம்பந்தர் 2 : 85 : 1 )
Tuesday, January 25, 2011
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
1 பிள்ளையார் வழிபாடு
மஞ்சளில் பிள்ளையார் செய்து (அதாவது மஞ்சளை அம்மியில் அரைத்து ஒரு கைப்பிடி பிள்ளையார் போல் பிடித்து வைத்தல்) அறுகம்புல் இட்டு, அப்போதே மங்கள மடந்தையரை கொண்டு மிளக்கேர்ரிவைத்தல். தொடங்கும் வினைகள் இனிதே நிறைவேறப் பிள்ளையாரை முதலில் வணங்கித் தொடங்குதல் தமிழ் மரபு.
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே!
2 முருகன் வழிபாடு
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! - ஒருகைமுகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன்! நான்!
(11 ஆம் திருமுறை)
3 திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கிற்குப் பூ இட்டு வழிபாடு செய்தல்
இல்லாக விளக்கது இருள் கெடுப்பது!
சொல்லாக விளக்கது சோதி உள்ளது!
பல்லக விளக்கது பலரும் காண்பது!
நல்லக விளக்கது நமச்சி வாயவே!
(அப்பர் 4 : 11 : 8 )
4 நிறைநாழி வழிபாடு
நாழி நிறைய நெல் நிறைத்துப் பூ இட்டு வழிபடல்
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும், இப் பூ மிசை
எண்ணன் பாலிக்கு மாறு, கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப் பிறவியே!
(அப்பர் 5 : 1 : 1 )
5 இறைவன்பால் நம் மனத்தைச் செலுத்துதல்
உயிருக்கு உயிராய் நிற்கும் இறைவனைச் சென்று அடையுமாறு நாம் அனைவரும் நம் மனத்தைச் செலுத்துவோமாக!
நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிறைவளை மடந்தை
கூறு தங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக், கற்றைஅம் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு
அறிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருள்
சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
(சுந்தரர் 7 )
நாளைய பதிவில் வழிபட்டு முறைகளை தொடர்சிப் பற்றிப் பார்ப்போம்.