Friday, December 31, 2010

உருத்திராட்ச மகிமை

உருத்திராடசமும் சாலிக்கிராமமும் நேபாளத்தில்தான் அதிகமாகக் கிடைக்கின்றன. உருத்திராட்சம் என்பதே சிவவடிவம். மனிதன் பிறப்பிலிருந்து பிரியும் வரை தன பந்தங்களிலிருந்தும் பாசங்களிலிருந்தும் விடுபட, எதோ ஒரு மதத்தைச் சார்ந்து வழிபடுகிறான். சிவநேசச் செல்வர்கள் உருத்திராட்சத்தின் மூலம் சிவனிடம் நேரிடையாக பக்தி செலுத்துவதுடன் சதா சிவனையே நினைந்து உருகுகிறார்கள். உருத்திராட்சத்தில் ஒரு சிறு துவாரம் உள்ளது, எம்மதத்தினரும் எங்குள்ளவரும் உருத்திராட்சம் அணியலாம். நம்பிக்கையுடன் அணிபவர்கள் அற்புத பலன்களைப் பெறுகிறார்கள். உருத்திராட்சம் வாங்குவது வைரத்தைச் சோதித்து வாங்குவது போல தேர்ந்தெடுக்க வேண்டு, இமாலயப் பிரதேசத்தில் கிடைக்கும் உருத்திராட்சம் பல நன்மைகளைத் தருகிறது, உருத்திராட்சம் கெடுதல் செய்யாது. ஒரு உருத்திராட்சத்தை 40 நாட்கள் அணிந்தபின் உடலிலும் உள்ளத்திலும் ஒரு மாற்றம் தெரியவரும். உருத்த்ராட்சத்தை ஸ்படிக மணிகளுடன் அல்லது துளசி விதிகளுடன் அணியலாம். உருத்திராட்சம் சிவா சொரூபம். ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சர்த்தவாறே உருத்திராட்சத்தை அணியலாம். கழுத்திலோ அல்லது ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் அணியலாம். மயான பூமிக்கோ மது அருந்தும் பிரதேசங்களுக்கோ உருத்திராட்சம் அணிந்து செல்லக்கூடாது. கறுப்புக் கயிற்றில் அல்லது தங்கம், வெள்ளி, தாமிரம் முதலிய உலோகங்களில் கட்டி அணியலாம். உருத்திராட்சம் அணிந்திருப்பதை பிறருக்குக் காண்பிக்கக் கூடாது. இரவு நேரங்களில் தூங்கும் பொது கழற்றி வைக்கவும். சருமத்தைத் தொடும் முறையில் அணிவது நல்லது. பூஜை அறையில் வைத்தும் வழிபடலாம்.

உருத்திராட்சம் 23 வகைகள் உள்ளன.

ஒரு முகம்: லெக்ஷ்மி சொரூபம். எல்லா எண்ணங்களும் பூர்த்தியாகும். இதை அணிவதோ இல்லத்தில் வைத்து பூசிப்பதோ லட்சுமி தேவியை ஆராதனை செய்வதற்குச் சமம். மேலும் மூளை, தலை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நரம்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் விடுபடலாம்.

இரண்டு முகம்: அர்த்த நாரீஸ்வரர் (சிவ பார்வதி சொரூபம்) - கணவன் மனைவிக்கும் ஒற்றுமை, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

மூன்று முகம்: மாதா சரஸ்வதி சொரூபம். மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல், தேர்வில் வெற்றிக்கு வழிகாட்டிடும்.

நான்கு முகம்: பிரம்மா சொரூபம். தியானத்திற்கு சிறந்தது.

ஐந்து முகம்: ருத்ர வடிவ, பஞ்சேஸ்வரர் ரூபம். காம, குரோத, லோப, அகங்காரம், அதீத பாசம், இவைகளை அகற்றும். இரத்தக் கொதிப்பு, இதய நோயுள்ளவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

ஆறு முகம்: கார்த்திகேய ரூபம். பிள்ளைப்பேறு விரும்பும் பெண்கள் இதை கையில் அணிந்து ஓம் நமசிவாய நம; என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் நன்மை பெறுவார்கள்.

எழு முகம்: சப்தரிஷி ரூபம். வியாபார விருத்தி, பங்கு சந்தையில் லாபம் தேடுபவர்களுக்கும் மூச்சுத்திணறல், ஆஸ்த்மா நோயாளிகளுக்கு ஒரு மருந்து.

எட்டு முகம்: கணேச ரூபம்.

ஒன்பது முகம்: நவதுர்கா ரூபம். இதனை அணிவதன் மூலம் உடலில் உள்ள உபாதைகளைத் தவிர்த்து உடலில் வலிமை தருவது. இடது கையில் சிரத்தையுடன் அணிய வேண்டும்.

பத்து முகம்: விஷ்ணு ரூபம். வாழ்க்கையில் முக்தியை அடைய விரும்புபவர்களுக்கு நல்லது.

பதினோரு முகம்: சிவரூபம், வாழ்க்கையில் வெற்றி வாகை சூட்டி மகிழ்ச்சியை அளிக்கிறது.

பணிரெண்டு முகம்: சூர்யா ரூபம். அரசியல்வாதிகளுக்கு நன்மை தருவது.

பதிமூன்று முகம்: விஸ்வதேவ ரூபம். (இந்திரன்) எல்லா நன்மைகளும் தர வல்லது.

பதினான்கு முகம்: பரமாத்மா சிவ ரூபம். சமூகத்தில் பெரிய அந்தஸ்து ஏற்பட உதவுகிறது.

பதினைந்து முகம்: பசுபதிநாத் ரூபம். தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அணிவது. பெண்களுக்கு பிரசவக் கோளாறுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பதினாறு முகம்: ஹரிசங்கர் ரூபம். நெருப்பு, திருட்டு இவைகளிலிருந்தும் இதய நோய்களிலிருந்தும் விடுபட உதவுகிறது.

பதினேழு முகம்: சீதாராம ரூபம். வீடு, வாகனங்கள் நிலம் வாங்கி சேர்த்திட வல்லது.

பதினெட்டு முகம்: பைரவ ரூபம். மரண பயத்திலிருந்து விடுபடவும் புகழுடனும் தெய்வீக வழிகளில் நாட்டமும் ஏற்பட அணியலாம்.

பத்தொன்பது முகம்: நாராயண ரூபம். சகல வியாதிகளிலிருந்தும் விடுபட அணிவது நல்லது.

இருபது முகம்: ஜனார்த்தனா ரூபம். பேய் பிசாசு பில்லி, சூன்யம் இவைகளிலிருந்து விடுபட சிறந்தது.

இருபத்தோரு முகம்: சிவரூபம் பிரம்மஹத்தி தோஷம் நீங்கி சிவன் அருள் பெற்று செல்வம் கொழித்து ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படுத்தி ஆரோக்கியத்தையும் சகல சம்பத்துகளையும் அணிள்ள வல்லது.

கௌரி சங்கர் - சிவபார்வதி ரூபம். உலக பந்தங்களிலிருந்து விடுபட்டு ஈசனையே துதித்து வாழும் வகையைத் தருவது.

நன்றி
"திருத்தலப் பயணச் செம்மல்" பேராசிரியர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு
உழவாரம் (சமய இலக்கியத்திங்கள் இதழ்)
மலர் - 26 - 2010 டிசம்பர் - இதழ் - 5
மதுரை பன்னிரு திருமுறை மன்றம்



























Thursday, December 30, 2010

காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்

ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்

நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு

நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு

வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்

விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !


ஆன்மீக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!

ஆன்மீக பயணம்: அண்ணாமலைக்கு அரோஹரா!

Tuesday, December 28, 2010

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம் 27 . 12 . 2010 அன்று பூங்கா முருகன் கோயில் (காந்தி மண்டபம்) மதுரை மிகவிமர்சையாக ஐயாப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழு வருகிற 5 . 01 . 2011 அன்று இரவு 6 .௦௦ 00 மணிக்குமேல் இருமுடி கட்டி புறப்படுகிறது. இவர்களின் ஆன்மீகப் பயணம் இனிதாக அமைய ஐய்யன் ஐயப்பனை வேண்டிக்கொள்கிறோம்.

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்

ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம் 27 . 12 . 2010 அன்று பூங்கா முருகன் கோயில் (காந்தி மண்டபம்) மதுரை மிகவிமர்சையாக ஐயாப்ப பக்தர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழு வருகிற 5 . 01 . 2011 அன்று இரவு 6 .௦௦ 00 மணிக்குமேல் இருமுடி கட்டி புறப்படுகிறது. இவர்களின் ஆன்மீகப் பயணம் இனிதாக அமைய ஐய்யன் ஐயப்பனை வேண்டிக்கொள்கிறோம்.

Wednesday, December 8, 2010

வாழ்க்கை சிந்தனைகள்



ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்
தாகத்தை தீர்க்காத தண்ணீர்
ததித்திரம் அறியாத பெண்கள்
கோபத்தை அடக்காத ஆண்கள்
குரு சொல் கேளாத சீடன்
குளிப்பதற்கு உதவாத தடாகம்
இவையாவும் இருந்தும் பயனில்லை ..........

Friday, November 26, 2010

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்


ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி

ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்

ஸ்ரீபதஞ்சலி காயத்ரி

ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்

ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி

ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி

ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்

ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி

ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்

ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி

ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்

ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்

ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி

ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்

ஸ்ரீதன்வந்திரி காயத்ரி

ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்

நன்றி :ஆன்மீகக்கடல்

Sunday, November 21, 2010

ஐந்து தலை நாகம் மங்களூரில்





ஐந்து தலை நாகம் மங்களூரில்






இந்த ஐந்துதலை நாகமானது மங்களூர் இன்ஃபோசிஸ் வளாகத்தில் வளையவந்தது.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆக, இந்துபுராணங்களில் சொல்லப்படும் ஐந்துதலைநாகமும் நிஜம்தான் என்பதற்கு இது ஆதாரம்.


நன்றி - ஆன்மீகக்கடல்

சாப்பிடுவது எப்படி?

சாப்பிடுவது எப்படி?

"சமைப்பது எப்படி?" படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?" அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.

  • பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
  • தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக்
  • கூடாது.
  • போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
  • ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
  • மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
  • பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
  • பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.

******* நன்றி:தினமலர் வாரமலர் 31.10.2010 ******************

Friday, November 5, 2010

இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்










இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்

Wednesday, October 27, 2010

வாழ்வை அறிந்து கொள்ள முற்பட்டால் உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்

"ஒரு மனிதன், தான் ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னால் அவன் தற்பெருமை பேசுபவனாக இருப்பான். அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லுபவன், ஒரு தந்திரசாலியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருப்பான். அப்படிப் புரிந்து கொண்டேன் என்று நடிப்பவன் ஒரு நிலையான கொள்கை இல்லாத பச்சோந்தி போல் இருப்பான். அவன் ஏதே ஒரு எதிர்ப்பார்ப்புடன் வாழ்பவன்.

அதற்கு மாறாக, ஒருவன், அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லையானால், அவன் அவர்களைப் புரிந்து கொள்ள ஆசைப்படாதவனாகவே இருப்பான், அதனால் அவன் அவர்களைப் பிரிந்து கொண்டதுபோல் நடிக்கவும் தேவை இல்லை. ஏனெனில் அவர்களை அறிந்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன், அவர்களை அறிந்து கொண்டவனாகிறான்".

"இதைப் போலத்தான் வாழ்வும், வாழ்வு ஒரு பெண்ணைப் போலத்தான், அதை அறிந்து கொள்ள முற்பட்டால், உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். முதலில், அதைப் புரிந்த கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். அதில் முழு ஈடுபாட்டோடு வாழ முற்படுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ளுவீர்கள்".

- ஓஷோவின் குட்டிக் கதைகள்

Sunday, October 24, 2010

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

2010 உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன் என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9
, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai625 010. India

Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Saturday, October 23, 2010

சாந்தா அபிஷேகம்

சாந்தா அபிஷேகம்

இன்று (22.10.2010) அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் சாந்தா அபிஷேகம் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது. இன்று ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், விநாயகர், சிவலிங்கம், குருநாதர், காத்தவராயன், மதுரைவீரன், சப்பாணி, பெரிய கருப்பு, இருளப்பர், கருப்பசாமி ஆகியோருக்கு 18 பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

எண்ணெய் காப்பு, மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, தயிர், பால், சந்தானம், சாத்துக்குடி சாறு, கரும்பு சாறு, திராட்சை சாறு, அன்னம், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், சொர்ணம் (காசு), அழகர்கோயில் தீர்த்தம், பன்னீர்.

அதன் பின்பு கோயில் முழுவதும் பூப்பந்தலால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மனுக்கு வெள்ளி கவசமும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டுயிருந்தது, ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இரவு 8 . 30 மணிக்கு மேல் பூஜை விமர்சையாக கொண்டாடப்பட்டது.


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

அதன்பின் உபயதாரர்கள் அனைவர்களுக்கும் மரியாதை நிமிர்த்தமாக துண்டு வழங்கப்பட்டது. அபிஷேகம் செய்த காசும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பிரசாதமாக சக்கரைப் பொங்கல், பருப்பு பாயாசம், கடலைப் பருப்பு சுண்டல், அபிஷேகம் செய்த அன்னம், பஞ்சாமிர்தம் மற்றும் வடை ஆகியவை வழங்கப்பட்டன.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002.

Friday, October 22, 2010

சிதம்பர ரகசியம்

சிதம்பர ரகசியம்

பாண்டிய மன்னன் ஆணைப்படி சிதப்பரம் கோயிலை அமைத்த கருவூரார், திருமூலர் வழித் தோன்றலாகையால் மூல குருவின் பெருமை நிலைக்கும்படியாக சித்தர்கள் கூறும் உடல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே கோயிலை அமைத்துள்ளார்.


மனிதன் நாள் ஒன்றுக்கு 21600 மூச்சு விடுகிறான். கனக சபையின் மேல் 21000 தங்க ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

மனித உடலில் 72000 நாடிகள் உள்ளன. தங்க ஓடுகளைப் பொறுத்த அடிக்கப்பட்டுள்ள ஆணிகளின் எண்ணிக்கை 72000.

கனக சபையின் முன் உள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள். தொண்ணுற்றாறு வெள்ளிப் பல கணிகள் தொண்ணுற்றாறு உடல் தத்துவங்கள்.

மனித உடலில் இருதயம் இடது பக்கம் சற்றுத் தள்ளி இருப்பதுபோல் நடராஜர் சன்னதி சற்று இடப்புறமாக ஒதுங்கியுள்ளது. இருதயம் தடித்துக் கொண்டே இருப்பது போல் நடராஜர் ஆடிக் கொண்டே இருக்கிறார்.


இருதயத்திற்குப் பக்கவாட்டில் கபாடங்கள் இருப்பதுபோல் சிதம்பதத்திலும் கருவறையில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களிலும் வழிகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒப்பிடத் தக்க வகையில்

அன்னமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞான மய கோசம்
ஆனந்த மய கோசம்
பிராணமய கோசம்


என்று பஞ்ச கோசங்களாகவே வர்ணிக்கப்படுகின்றன.

சித்தான கருவூரார் என்ற சித்து
சின்மயத்தில் பேரின்பம் கொண்ட சித்து
முத்தான வயததுவும் முன்னுறாண்டு
மூதுலகில் பாண்டியனுக்கு உகந்த சித்து
பக்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம்
பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து - போகர் 7000 / 5769

என்று போகர் கூறுவதால் கருவூராரே சிதம்பரம் கோயிலை அமைத்தவர் என்பது விளங்குகிறது.

சித்தர்கள் வரலாறு - எஸ்பி. பி. இராமச்சந்திரன்
தாமரை நூலகம், சென்னை - 26

Monday, October 18, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் பத்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பதைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 17.10.2010 அன்று பத்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பத்தாம் நாள் முறையாக திரு. நாகராஜ் குடும்பத்தார், திரு ராஜா குடும்பத்தார், திரு சண்முகம் குடும்பத்தார் மற்றும் திரு ராமஜெயம் (நாடார் கடை) பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு இன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மிக அழகாக இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. ராமஜெயம் குடும்பத்தார் (2 பேர்), திரு ராஜா குடும்பத்தார் (2 பேர்), திரு சண்முகம் குடும்பத்தார் (3 பேர்), மற்றும் நாகராஜ் குடும்பத்தார்(2 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.




ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக கேசரியும் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

நவராத்திரி விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002



Sunday, October 17, 2010

எங்க ஊர் பெருமாள் கருடவாகனத்தில் (திருப்பாலை)

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பது

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 16.10.2010 அன்று ஒன்பதாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஒன்பதாம் நாள் முறையாக திரு. சுப்புராம் குடும்பத்தார், மற்றும் கடை ஊழியர்கள் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் சரஸ்வதி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (3 பேர்) அவர்களுக்கும் , கடை திரு. ஊழியர்கள் (48 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த சரஸ்வதி படம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கடலைப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஒன்பதாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002




Saturday, October 16, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் எட்டு

நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 15.10.2010 அன்று எட்டாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. எட்டாம் நாள் முறையாக திரு. மனோசிங் குடும்பத்தார், திரு ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார், திருமதி சாந்தா குடும்பத்தார் மற்றும் திரு மோகன் குமார் குடும்பத்தார் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் அன்ன லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. மனோசிங் குடும்பத்தார் (2 பேர்) அவர்களுக்கும் , திரு. ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார்களுக்கு (1 பேர்), திருமதி சாந்தா குடும்பத்தார் (1 நபர்), திரு மோகன் குமார் அவர்களின் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்கள் வரைந்த அன்ன லட்சமி படம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக புளியோதரையும் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

எட்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002


Friday, October 15, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஏழு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 14.10.2010 அன்று ஏழாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஏழாம் நாள் முறையாக திரு. கருப்பையா குடும்பத்தார், திரு காமராஜ் குடும்பத்தார் பூஜையாகும்.

ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. கருப்பையா அவர்களின் தந்தை அவர்களுக்கும், திரு கருப்பையா குடும்பத்தார் (4 பேர்) அவர்களுக்கும் , திரு. காமராஜ் அவர்களின் தம்பி குடும்பத்தார் (2 பேர்), திரு காமராஜ் அவர்களின் தாயார் அவர்களுக்கும், திரு காமராஜ் குடும்பத்தார்களுக்கும் (௬ நபர்), திரு கருப்பையா அவர்களின் அக்கா குடும்பத்தார் (2 பேர்)களுக்கும், மற்றும் திரு கருப்பையா அவர்களின் நண்பர் அவர்களுக்கும் (1 நபர்) மரியாதை செய்யப்பட்டது

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்கள் வரைந்த லட்சமி படம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்

ஏழாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.


அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 00௨


Thursday, October 14, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 13.10.2010 அன்று ஆறாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆறாம் நாள் முறையாக திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார், திரு உமாபதி குடும்பத்தார், மற்றும் போலீஸ் காலணியில் உள்ள திருமதி இலச்சுமி குடும்பத்தார், திரு கணேசன் குடும்பத்தார், திரு ஜெயராமன் குடும்பத்தார் பூஜையாகும்.

அவருடைய ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார் (3 பேர்), திரு. உமாபதி குடும்பத்தார் (3 பேர்), மற்றும் திரு உமாபதி அவர்களின் அக்கா (1 நபர்) அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. மற்றும் திருமதி இலச்சுமி குடும்பத்தா(4 பேர்)ருக்கும், திரு கணேசன் குடும்பத்தார் (3 பேர்), திரு ஜெயராமன் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த கலர் கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக தேங்காய் சாதம் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஆறாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

Wednesday, October 13, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 12.10.2010 அன்று ஐந்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நாள் முறையாக திரு. ரவி குடும்பத்தார், திரு.அருணா குடும்பத்தார், திரு.சேகர் குடும்பத்தார் மற்றும் தாணுமூர்த்தி குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வரைந்த நடராஜர் மிக அருமையாக இருந்தது. அவருடைய மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார் . ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. அருணா குடும்பத்தார், திரு. சேகர் குடும்பத்தார், திரு ரவி குடும்பத்தார்களுக்கு (22 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது. மற்றும் தாணுமூர்த்திக் குடும்பத்தா(3 நபர்)ருக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்


பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

ஐந்தாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002