Friday, December 31, 2010
உருத்திராட்ச மகிமை
Thursday, December 30, 2010
காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !
பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்
ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்
ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்
நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு
நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு
வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்
விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !
Tuesday, December 28, 2010
ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்
ஐயப்பன் மண்டல பூஜை அன்னதானம்
Wednesday, December 8, 2010
வாழ்க்கை சிந்தனைகள்
Friday, November 26, 2010
சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்
சித்தர்களின் காயத்ரி மந்திரங்கள்
ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்
ஸ்ரீதிருமூலர் சித்தரின் காயத்ரி
ஓம் ககன சித்தராய வித்மஹே
பிரகாம் சொரூபினே தீமஹி
தந்நோ திருமூலராய ப்ரசோதயாத்
ஸ்ரீபதஞ்சலி காயத்ரி
ஓம் சிவ தத்துவாய வித்மஹே
யோக ஆத்ராய தீமஹி
தந்நோ பதஞ்சலிகுரு ப்ரசோதயாத்
ஸ்ரீவியாக்ரபாதர் காயத்ரி
ஓம் ஆனந்த சொரூபாய வித்மஹே
ஈஸ்வரசிஸ்யா தீமஹி
தந்நோ வியாக்ரபாத ப்ரசோதயாத்
ஸ்ரீ போகர் சித்தர் காயத்ரி
ஓம் நவயாஷாவைகடாய வித்மஹே
மன்மத ரூபாய தீமஹி
தந்நோ பிரபஞ்ச சஞ்சார சீனபதிரிஷி
ப்ரசோதயாத்
ஸ்ரீகாலங்கிநாதர் சித்தர் காயத்ரி
ஓம் வாலை உபாசகாய வித்மஹே
புவனேஸ்வ்ரி சிஷ்யா தீமஹி
தந்நோ காலங்கிநாத ப்ரசோதயாத்
ஸ்ரீபுண்ணாக்கீசர் சித்தர் காயத்ரி
ஓம் ஈசத்தவாய வித்மஹே
ரண நாவாய தீமஹி
தந்நோ முக்தி புண்ணாக்கீச ப்ரசோதயாத்
ஸ்ரீசிவவாக்கியர் சித்தர் ப்ரசோதயாத்
ஓம் திருமழிசையாழ்வராய வித்மஹே
தத்துவ புருஷாய தீமஹி
தந்நோ சிவாக்யை சித்த ப்ரசோதயாத்
ஸ்ரீகருவூரார் சித்தர் காயத்ரி
ஓம் ராஜமூர்த்தியாய வித்மஹே
சவுபாக்ய ரத்னாய தீமஹி
தந்நோ வாதகாயை கருவூர் சித்த ப்ரசோதயாத்
ஸ்ரீதன்வந்திரி காயத்ரி
ஓம் ஆதி வைத்யாய வித்மஹே
ஆரோக்ய அனுக்ரஹாய தீமஹி
தந்நோ தன்வந்திரீ ப்ரசோதயாத்
நன்றி :ஆன்மீகக்கடல்
Sunday, November 21, 2010
ஐந்து தலை நாகம் மங்களூரில்
ஐந்து தலை நாகம் மங்களூரில்
நன்றி - ஆன்மீகக்கடல்
சாப்பிடுவது எப்படி?
சாப்பிடுவது எப்படி?
"சமைப்பது எப்படி?" படித்திருக்கிறோம். "சாப்பிடுவது எப்படி?" அதற்கும் சாஸ்திரம் இருக்கிறது.- பகலில் ஒரு வேளையும், இரவில் ஒரு வேளையும் மட்டுமே போஜனம் செய்ய வேண்டும். சந்தியா காலம், விடியற்பொழுது, நடுநிசி ஆகிய வேளைகளில் எதையும் புசிக்கலாகாது.
- தாமரை இலை தவிர, வேறு எந்த இலையிலும் பின்புறத்தில் சாப்பிடக்
- கூடாது.
- போஜன காலத்தில் பேசினால், ஆயுள் குறையும்.
- ஈர வஸ்திரத்துடனும், ஒற்றை வஸ்திரத்துடனும் சாப்பிடக் கூடாது.
- மனைவி சாப்பிடும் போது, கணவன் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
- பந்தி போஜனம் பண்ணும்போது, முன்னதாக எழுந்து விடலாகாது. அப்படி எழுந்து விட்டால், அந்தப் பந்தியைச் சேர்ந்த மற்றவர்களின் பாவத்தை அவன் அடைய வேண்டும்.
- பழம், பட்சணம் இவைகளைக் குழந்தைகளுக்கு முதலிலும், மற்ற பதார்த்தங் களைப் பெரியவர்களுக்கு முதலிலும் பரிமாற வேண்டும்.
******* நன்றி:தினமலர் வாரமலர் 31.10.2010 ******************
Friday, November 5, 2010
Wednesday, October 27, 2010
வாழ்வை அறிந்து கொள்ள முற்பட்டால் உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்
அதற்கு மாறாக, ஒருவன், அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லையானால், அவன் அவர்களைப் புரிந்து கொள்ள ஆசைப்படாதவனாகவே இருப்பான், அதனால் அவன் அவர்களைப் பிரிந்து கொண்டதுபோல் நடிக்கவும் தேவை இல்லை. ஏனெனில் அவர்களை அறிந்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன், அவர்களை அறிந்து கொண்டவனாகிறான்".
"இதைப் போலத்தான் வாழ்வும், வாழ்வு ஒரு பெண்ணைப் போலத்தான், அதை அறிந்து கொள்ள முற்பட்டால், உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். முதலில், அதைப் புரிந்த கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். அதில் முழு ஈடுபாட்டோடு வாழ முற்படுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ளுவீர்கள்".
- ஓஷோவின் குட்டிக் கதைகள்
Sunday, October 24, 2010
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.
இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.
தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.
நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in
மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்
http://heroes.cnn.com/vote.aspx
இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
Saturday, October 23, 2010
சாந்தா அபிஷேகம்
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002.
Friday, October 22, 2010
சிதம்பர ரகசியம்
கனக சபையின் முன் உள்ள ஐந்து படிகள் பஞ்சபூதங்கள். தொண்ணுற்றாறு வெள்ளிப் பல கணிகள் தொண்ணுற்றாறு உடல் தத்துவங்கள்.
மனித உடலில் இருதயம் இடது பக்கம் சற்றுத் தள்ளி இருப்பதுபோல் நடராஜர் சன்னதி சற்று இடப்புறமாக ஒதுங்கியுள்ளது. இருதயம் தடித்துக் கொண்டே இருப்பது போல் நடராஜர் ஆடிக் கொண்டே இருக்கிறார்.
இருதயத்திற்குப் பக்கவாட்டில் கபாடங்கள் இருப்பதுபோல் சிதம்பதத்திலும் கருவறையில் பக்கவாட்டில் இரண்டு பக்கங்களிலும் வழிகள் உள்ளன.
இக்கோயிலில் உள்ள ஐந்து சபைகளும் மனித உடலுடன் ஒப்பிடத் தக்க வகையில்
அன்னமய கோசம்
என்று போகர் கூறுவதால் கருவூராரே சிதம்பரம் கோயிலை அமைத்தவர் என்பது விளங்குகிறது.
சித்தர்கள் வரலாறு - எஸ்பி. பி. இராமச்சந்திரன்
Monday, October 18, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்பதைப் பார்க்க
ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மனுக்கு இன்று சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மிக அழகாக இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. ராமஜெயம் குடும்பத்தார் (2 பேர்), திரு ராஜா குடும்பத்தார் (2 பேர்), திரு சண்முகம் குடும்பத்தார் (3 பேர்), மற்றும் நாகராஜ் குடும்பத்தார்(2 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
பிரசாதமாக கேசரியும் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.
நவராத்திரி விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
Sunday, October 17, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் எட்டைப் பார்க்க
ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் சரஸ்வதி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. சுப்புராம் குடும்பத்தார் (3 பேர்) அவர்களுக்கும் , கடை திரு. ஊழியர்கள் (48 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது.
ஜெகன் அவர்கள் வரைந்த சரஸ்வதி படம்
ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்
ஸ்ரீ ராக்காயி அம்மன்
பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கடலைப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.
ஒன்பதாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
Saturday, October 16, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஏழைப் பார்க்க
ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் அன்ன லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. மனோசிங் குடும்பத்தார் (2 பேர்) அவர்களுக்கும் , திரு. ரத்தினக்குமார் அக்கா குடும்பத்தார்களுக்கு (1 பேர்), திருமதி சாந்தா குடும்பத்தார் (1 நபர்), திரு மோகன் குமார் அவர்களின் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்
ஸ்ரீ ராக்காயி அம்மன்
பிரசாதமாக புளியோதரையும் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.
எட்டாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
Friday, October 15, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு பார்க்க
ஜெகன் அவர்களின் மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஜெகன் அவர்கள் லட்சமி படம் அழகாக வரைந்து இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. கருப்பையா அவர்களின் தந்தை அவர்களுக்கும், திரு கருப்பையா குடும்பத்தார் (4 பேர்) அவர்களுக்கும் , திரு. காமராஜ் அவர்களின் தம்பி குடும்பத்தார் (2 பேர்), திரு காமராஜ் அவர்களின் தாயார் அவர்களுக்கும், திரு காமராஜ் குடும்பத்தார்களுக்கும் (௬ நபர்), திரு கருப்பையா அவர்களின் அக்கா குடும்பத்தார் (2 பேர்)களுக்கும், மற்றும் திரு கருப்பையா அவர்களின் நண்பர் அவர்களுக்கும் (1 நபர்) மரியாதை செய்யப்பட்டது
ஏழாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 00௨
Thursday, October 14, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க
அவருடைய ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,
உபயதார்களாகிய திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார் (3 பேர்), திரு. உமாபதி குடும்பத்தார் (3 பேர்), மற்றும் திரு உமாபதி அவர்களின் அக்கா (1 நபர்) அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. மற்றும் திருமதி இலச்சுமி குடும்பத்தா(4 பேர்)ருக்கும், திரு கணேசன் குடும்பத்தார் (3 பேர்), திரு ஜெயராமன் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.
பிரசாதமாக தேங்காய் சாதம் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.
ஆறாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002
Wednesday, October 13, 2010
நவராத்திரி விழா 2010
நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
இன்று ஜெகன் அவர்கள் வரைந்த நடராஜர் மிக அருமையாக இருந்தது. அவருடைய மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார் . ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. அருணா குடும்பத்தார், திரு. சேகர் குடும்பத்தார், திரு ரவி குடும்பத்தார்களுக்கு (22 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது. மற்றும் தாணுமூர்த்திக் குடும்பத்தா(3 நபர்)ருக்கும் மரியாதை செய்யப்பட்டது.
பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.
ஐந்தாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.
அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002