இடர் களையும் பதிகம்
திருச்சிற்றம்பலம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறையுடையார் குற்றமோராய் கொள்கையினால் உயர்ந்த
நிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சு தன்னைத்
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை
மனத்தகத் தோர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் தெழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூ வொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
மலைபுரிந்த மன்னவன்றன் மகளை போர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலை புரிந்த பலிமகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கிழ்
நிலை புரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
பாங்கின் நல்லார் படிமஞ் செய்வார் பாரிடமும் பலிசேர்
தஊங்கி நல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பிநோடுந் தலைவா நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேர் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியினையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கலம் மேயவனே
கூறு கொண்டே மூன்று மொன்றாக் கூட்டியோர் வெங் கணையால்
மாறுகொண்டார் புரமொரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
வேழ வேன்கொம்பு ஒசித்த மாலும் விளங்கி நான்முகனும்
சூழ எங்கும் நேட ஆங்கோர் சொதியுளாகி நின்றாய்
கேழல் இல்லா வாய்மொழியால் தோத்திர நின்னடியே
நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே
நீடவல்ல வார்சடையான் மேய நெடுங் களத்தைச்
சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக் கொண் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment