திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 1
திருமுறை தமிழ்த்திருமணம் (சிறந்த எளிய தமிழ் திருமணம்) தொடர்ச்சி 2
அரசாணிக்கால் நடுதல்
இக்குடும்பம் வாழையடி வாழையாக வளரவேண்டும் என்ற அடிப்படையில் அமைவது இது. மங்கலப் பெண்டிர் மூன்றுபேர் கூடிச் செய்யவேண்டு, மணமேடையின் இடப்புறம் (அதாவது பார்வையாளருக்கு நேரே வலதுபக்கம்) கட்ட வேண்டு, வாழை இலை பரப்பிப் பச்சரிசி இட்டு, "ஓம்" எனும் மந்திரம் எழுதி மணிவிழா நடத்திவைக்கும் பெரியவர் மலரிட்டு மணமகனைக்கொண்டு வலிபாடாற்றல்.
பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின்
மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத்
தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை
என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை
அன்னானை அம்மானைப் பாடுதுங்க்காண் அம்மானாய்
(திருவாசகம்)
மணமகள் சடங்கு
மணமகளுக்கு திருநீறு குங்குமமும் கொடுத்தல்
முத்திந்தாழ் வடமும் சந்தனக் குழம்பும்
நீரும் தன மார்பினில் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர் மரகத மடுத்தாற்போல்
அத்தனார் உமையோடு இன்புறுகின்ற
ஆலவா யாவதும் இதுவே!
(சம்பந்தர் 3 : 120 : 7 )
பெற்றோர் வழிபாடு
மணமகள் தன தாய் தந்தையரை வணங்கி அவர்தம் திருவடிகளில் சந்தானம் பூசி மலரிட்டு வழிபாடு செய்தல்
அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ!
அன்புடைய மாமனும் மாமியும் நீ!
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ!
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ!
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ!
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ!
இப்பொன் நீ, இம்மானிநீ இம் முத்து நீ!
இறைவன் நீ, இரு ஊருந்த செல்வன் நீயே!
(அப்பர் 6 : 95 : 1 )
பெற்றோர் வாழ்த்துதல்
மணமகளைப் பெற்றோர் வாழ்த்தித்திருநீறும் குங்குமமும் அணிவித்துத் திருமணப் புத்தாடைகள் வழங்குதல்
காணார் புலித்தோல் உடை தலை ஊண் காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆறேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ!
(திருவாசகம்)
திருஊஞ்சல்
மணமேடைக்கு முன்னாள் எதிரெதிரே இரு நாற்காலிகளில் மணமகனையும் மணமகளையும் அமரச செய்தல் திருஊஞ்சல் பாட்டை மங்கல மகளிர் சிலர் பாடப், பின்பு நாதசுரம் சாதனை இசைத்தல்.
சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாள்மலர்த்தால் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோச மங்கை
ஆரா அமுதின் அருள்தாள் இணை பாடிப்
போராற்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ!
(திருவாசகம்)
No comments:
Post a Comment