Sunday, October 10, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்று

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 08.10.2010 அன்று இனிதே நவராத்திரி விழா ஆரம்பம் ஆனது. முதல் நாள் முறையாக திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தார் பூஜையாகும்.

கோயில் அழகாக விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெகன், அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகிய மூவரும் கலர் மற்றும் மலர் கோலங்களால் இன்னும் அழகாக அலங்கரித்து இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தார் (2 பேர்), அவருடைய மைத்துனர் குடும்பத்தார் (3 பேர்) மற்றும் ஆறுமுகம் கிருஷ்ணவேணி குடும்பத்தார் (2 பேர்) மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் தாயார், அவருடைய மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த விநாயகர் கோலம்

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்

ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக சக்கரை பொங்கல் மற்றும் பாசிபயறு சுண்டல் வழங்கப்பட்டது.
முதல் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

No comments:

Post a Comment