Wednesday, October 27, 2010

வாழ்வை அறிந்து கொள்ள முற்பட்டால் உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும்

"ஒரு மனிதன், தான் ஒரு பெண்ணைப் புரிந்து கொண்டேன் என்று சொன்னால் அவன் தற்பெருமை பேசுபவனாக இருப்பான். அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லுபவன், ஒரு தந்திரசாலியாகவும், ஏமாற்றுக்காரனாகவும் இருப்பான். அப்படிப் புரிந்து கொண்டேன் என்று நடிப்பவன் ஒரு நிலையான கொள்கை இல்லாத பச்சோந்தி போல் இருப்பான். அவன் ஏதே ஒரு எதிர்ப்பார்ப்புடன் வாழ்பவன்.

அதற்கு மாறாக, ஒருவன், அவர்களைப் புரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லையானால், அவன் அவர்களைப் புரிந்து கொள்ள ஆசைப்படாதவனாகவே இருப்பான், அதனால் அவன் அவர்களைப் பிரிந்து கொண்டதுபோல் நடிக்கவும் தேவை இல்லை. ஏனெனில் அவர்களை அறிந்து கொள்ளவே அவன் விரும்பவில்லை. ஆகவே, அவன், அவர்களை அறிந்து கொண்டவனாகிறான்".

"இதைப் போலத்தான் வாழ்வும், வாழ்வு ஒரு பெண்ணைப் போலத்தான், அதை அறிந்து கொள்ள முற்பட்டால், உங்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். முதலில், அதைப் புரிந்த கொள்ள வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். அதில் முழு ஈடுபாட்டோடு வாழ முற்படுங்கள். அப்பொழுது அறிந்து கொள்ளுவீர்கள்".

- ஓஷோவின் குட்டிக் கதைகள்

No comments:

Post a Comment