Monday, October 11, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் மூன்று

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் இரண்டைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 10.10.2010 அன்று மூன்றாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மூன்றாம் நாள் முறையாக திரு. ரத்தினக்குமார் குடும்பத்தார், குழந்தைவேலு குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வர இயலாத காரனத்தலால் அவருடைய மனைவி, மற்றும் ஜெகன் அவர்களின் தாயார் ஆகியோர் மலர் மற்றும் கலர் கோலம் போட்டு இருந்தனர். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. ரத்தினக்குமார் குடும்பத்தார் (3 பேர்), திரு. ரத்தினக்குமார் சகோதரர் குடும்பத்தார் (4 பேர்), மேலும் அவர்களின் மூத்த சகோதரர் வராததால் அவர்களிடமே அவரின் மரியாதையும் செய்யப்பட்டது. மற்றும் குழந்தைவேலு குடும்பத்தார்(4 பேர்)களுக்கு மரியாதை செய்யப்பட்டது.




ஜெகன் அவர்களின் தாயார் வரைந்த மலர் கோலம்



ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த கோலம்

ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்



ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக லெமன்சாதம் மற்றும் கடலைபருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

மூன்றாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002


No comments:

Post a Comment