Thursday, October 14, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஆறு

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்தைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 13.10.2010 அன்று ஆறாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஆறாம் நாள் முறையாக திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார், திரு உமாபதி குடும்பத்தார், மற்றும் போலீஸ் காலணியில் உள்ள திருமதி இலச்சுமி குடும்பத்தார், திரு கணேசன் குடும்பத்தார், திரு ஜெயராமன் குடும்பத்தார் பூஜையாகும்.

அவருடைய ஜெகன் அவர்களின் மனைவி கலர் மற்றும் மலர்களால் கோலம் போட்டு இருந்தார். ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது,

உபயதார்களாகிய திரு. பாஸ்கரப் பண்ணையார் குடும்பத்தார் (3 பேர்), திரு. உமாபதி குடும்பத்தார் (3 பேர்), மற்றும் திரு உமாபதி அவர்களின் அக்கா (1 நபர்) அவர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. மற்றும் திருமதி இலச்சுமி குடும்பத்தா(4 பேர்)ருக்கும், திரு கணேசன் குடும்பத்தார் (3 பேர்), திரு ஜெயராமன் குடும்பத்தார்(3 பேர்)களுக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்


ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த கலர் கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்

பிரசாதமாக தேங்காய் சாதம் மற்றும் பாசிப் பருப்பு சுண்டல் வழங்கப்பட்டது.

ஆறாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

No comments:

Post a Comment