Wednesday, October 13, 2010

நவராத்திரி விழா 2010

நவராத்திரி விழா 2010 - நாள் ஐந்து

நவராத்திரி விழா 2010 - நாள் ஒன்றை பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் மூன்றைப் பார்க்க
நவராத்திரி விழா 2010 - நாள் நான்கைப் பார்க்க

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் 12.10.2010 அன்று ஐந்தாம் நாள் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. ஐந்தாம் நாள் முறையாக திரு. ரவி குடும்பத்தார், திரு.அருணா குடும்பத்தார், திரு.சேகர் குடும்பத்தார் மற்றும் தாணுமூர்த்தி குடும்பத்தார் பூஜையாகும்.

இன்று ஜெகன் அவர்கள் வரைந்த நடராஜர் மிக அருமையாக இருந்தது. அவருடைய மனைவி மலர்களால் கோலம் போட்டு இருந்தார் . ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இரவு 8.00 மணிக்கு மேல் பூஜை ஆரம்பித்து இனிதே முடிந்தது, உபயதார்களாகிய திரு. அருணா குடும்பத்தார், திரு. சேகர் குடும்பத்தார், திரு ரவி குடும்பத்தார்களுக்கு (22 பேர்களுக்கும்) மரியாதை செய்யப்பட்டது. மற்றும் தாணுமூர்த்திக் குடும்பத்தா(3 நபர்)ருக்கும் மரியாதை செய்யப்பட்டது.

ஜெகன் அவர்களின் மனைவி வரைந்த மலர் கோலம்

ஜெகன் அவர்கள் வரைந்த கோலம்


ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன்


ஸ்ரீ ராக்காயி அம்மன்


பிரசாதமாக சக்கரைப் பொங்கல் மற்றும் கருப்பு கொண்டைகடலை சுண்டல் வழங்கப்பட்டது.

ஐந்தாம் நாள் விழா இனிதே நிறைவு பெற்றது.

அருள்மிகு சோலைக்குட்டி என்ற ஸ்ரீ அன்னகாமாட்சி அம்மன் திருக்கோயில்
தல்லாகுளம், மதுரை - 625 002

No comments:

Post a Comment